Friday, May 25, 2012

05. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - ஆஷிகா (றாஹிலா ஹலாம்) - கொழும்பு


05. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - ஆஷிகா (றாஹிலா ஹலாம்) - கொழும்பு

இளங் கவிக்குயில் ரிம்ஸா முஹம்மதின் கன்னி வெளியீடான 'தென்றலின் வேகம்" (கவிதைத் தொகுப்பு) - விமர்சனம் / கருத்து.

இணையத்தில் இறக்கைக்கட்டிப் பறந்து வந்த கவிதைத் தொகுப்பை கணனி முன் அமர்ந்து மிக பவ்வியமாய் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க தென்றலின் வேகத்தை எனக்குள்ளும் உணர ஆரம்பித்தேன். வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் கணிக்க முடியாது இந்தத் தென்றலின் வேகம் எத்தனை கிலோ (மனோ) மீற்றர் என்று. அத்தனை உணர்ச்சிப் பெருக்குடன் நூலின் எழுத்துக்களின் மேல் விழிகளை விரட்டும் வாசகர்களின் அடிமனதைத் தொட்டுச் சலனப்படுத்தும் கவிமலர்களால் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பாய் தென்றலின் வேகம் தவழ்கிறது.

முதலில் என் கண்களில் கவரப்பட்டு கருத்தைத் தொட்டக் கவிதை 'கண்ணீரில் பிறந்த காவியம்!" அதில்,

முன்னேற்றப் பாதையிலே நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கு மர ஏற்றச் சவாரியாக சாணேற முழஞ்சறுக்கி சலிப்பாகின!

என தான் எடுக்கும் முயற்சியையும் சந்திக்கும் தோல்வியையும் விளக்கும் கவிஞரின் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது...

கண்ணீரில் பிறந்ததோ காவியம்- என் கடமையில் நிலைத்ததோ சீவியம்!!!

அதே போன்று 'எனக்குள் உறங்கும் நான்" என்ற கவிதையும் எடுக்கும் முயற்ச்சிக்கெல்லாம் முட்டுக்கட்டைகள் பல இருந்தும் முயல்கின்ற ஒருவனின் உள்ளத்தைக் கவிஞர் தான் நின்று வெளிப்படுத்துகின்றார்.

இவ்வாறு ஒரு மனிதனின் மனப் போராட்டங்களையும், வாழ்க்கைப் பாதையில் சந்திக்கும் முட்டுக்கட்டைகளையும் வெகு நிதர்சனமாய் கூறும் கவிதைகளாக 'மௌனித்துப் போன மனம்!", 'காத்திருக்கும் காற்று!", 'மௌனத் துயரம்!" போன்றவை கவிஞரின் மனதில் இருந்து மிகச் சிறந்த வார்த்தைகளால் பிரசவாமாகியுள்ளன.

'நெஞ்சில் உறுதி வேண்டும்" என்ற வரிக்கு பல அர்த்தங்களால் கோர்த்து ஒரு கவிதை செய்தது போல் 'வெற்றியின் இலக்கு!" வாசிப்பவரின் மனதில் ஒரு திட உணர்வை எழுப்புகிறது. அதே உணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளாக 'வானம் உனக்கு வசமாகும்!", 'வாழ்வு மிளிரட்டும்!" என்பனவும் அமைந்துள்ளன.

அகதி வாழ்வினைத் தொட்டுப் போகும் ஒரு கவிதை 'விடியலைத் தேடும் வினாக்குறிகள்!"

சொந்த மண்ணின் பேறான சுக வளத்தை இழந்து வெந்த உள்ளத்தோடும் வேக்காட்டுப் பெருமூச்சோடும் வாழும் இவர்கள் உண்மையில் விடியலைத் தேடும் வினாக்குறிகள்!!!

சொந்த மண்ணில் சுகமாய் வாழ்ந்து அகதியாய் போனவனின் சரித்திரத்தை இந்த வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

'ஆத்மாவின் உறுதி!" துன்பம் என்பது யாதும் அறியாது இன்பத்திலே திளைத்த ஒருவன், பின் கஷ்டங்களை அநுபவிப்பதும், இனிமையினை சுவைத்த ஐம்புலன்கள் பிறர்படும் துன்பத்தை நோக்கையிலே ஏற்படும் பரிதாப உணர்வின் போது உலக வாழ்வின் உண்மையை அறிகையிலே இறைவனை உணர்ந்திடும் தருணத்தில் அவனது ஆத்மா உறுதியடைவதை இந்தக் கவிதை மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது.

காதல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அந்த வகையில் தென்றலின் வேகத்திலும் கவிஞர் காதலைத் தொட்டுச் சென்றிருக்கிறார். காதல் கவிதைகளாக, காதல் பொழியும் ஒரு பெண்ணின் காவியமாக, கன்னியவளின் காதல் தரிசனத்துக்காய் காத்திருக்கும் காளையாக காதல் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 'தென்றலே தூது செல்" என்ற கவிதையில் செதுக்கிய தமிழ் சொற்கொண்ட வரிகள் மிக அருமை.

வானில் தவழும் வண்ண முகிலே... வட்டக் கருவிழியால் என்னை வளைத்துக் கொண்ட - அந்த வஞ்சிக் கொடியாளிடம் - என் வாட்ட நிலையை வாயாரச் சொல்லிவிட மாட்டாயோ?

என காதலை செந்தமிழ் சிந்துப் பாடுகிறது.

நூலாய் உருமாறிய கவிதைத் தொகுப்பின் உள்ளத்தில் 'புத்தகக் கருவூலம்!" என்ற கவிதையில் கவிதை உணர்வுக் கொண்டு புத்தகத்தின் பெருமையை பூவுலகம் அறிய கவிஞர் பறைசாற்றுகின்றார் இவ்வாறு...

நிகழ்கால நடப்புக்கும் எதிர்காலத் தொடுப்புக்கும் வாஞ்சையுடன் வனப்பளிக்கும் வளமான நாற்றும் அது!

காதல், இழப்பு, ஆசை, கனவு, இன்பம், துன்பம் என்ற மனித வாழ்வின் புரட்டும் பக்கங்களில் 'சுனாமி" என்பது சுட்ட வடுவாய், செதுக்கிய கல்வெட்டாய் மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அசம்பாவித சம்பவம். 'சுனாமி தடங்கள்|| மறந்த இறைவனை நினைவூட்டும் ஒரு அதிர்ச்சி நிகழ்வாக கவிஞர் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

மது அழிவிற்கு அத்திவாரம் என்பதாக 'பாவங்களின் பாதணி!" என்ற கவிதையிலும், தாய் பறவையின் பிரிவில் தவிக்கும் குஞ்சின் அலறலாக 'ஆராதனை!" மற்றும் 'ஓர் ஆத்மா அழுகிறது!" போன்ற கவிதைகளிலும் கவிஞர் தனது எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்.

நட்பை வெளிப்படுத்தும் கவிதையாய் கவிஞர் 'நட்பு வாழ்வின் நறும் பூ!" என்ற கவிதையிலும், நட்'பூ'வை வழங்கிய நண்பனே அதை எறிந்தான் என்பதை மிகச் சுருக்கமாக விளக்கும் கவிதையாக 'உடைந்த இதயம்!" என்ற கவிதையும் தொட்டுச் செல்கிறது.

நூலின் இறுதிப் பகுதியை அலங்கரிக்கும் குட்டிக் கவிதைகள் வாசிப்பவரின் மனதில் 'நச்'சென்று படும் விதத்தில் கவிஞரால் எழுதப்பட்டிருக்கிறது.

தெரிவு செய்யப்பட்ட வார்த்தகளினால் கவிஞர் எழுதிய கவிதைத் தொகுப்பு ''தென்றலின் வேகம்" புயலாய் ஒரு முறை ஒவ்வொருவர் மனதையும் சூறையாடிச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

காதலின் தோல்வியையும், காதல் வேண்டுதலையும் காதலியாகவும், தாயை இழந்து உறவுகள் சூழ இருந்தும் அநாதையாகிய மகளாக, வெற்றி பாதையில் பரவிக் கிடக்கும் முட்களாய் குத்தும் துன்பங்களை சந்திக்கும் வாழ்க்கைப் போராளியாக என இப்படி பலப் பல அவதாரத்தினில் இந்தத் தென்றலின் வேகம் கவிதைத் தொகுப்பை மாலையாகக் கோர்த்து வாசகர்களுக்கு வழங்கிய இளங்கவிக் குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் மேலும் பல நூற்களை இலக்கிய உலகுக்கும், உள்ளங்களுக்கும் படைக்க வேண்டி வாழ்த்துவோம். வாழ்க... வளர்க...

ஆஷிகா (றாஹிலா ஹலாம்) கொழும்பு.

Wednesday, February 29, 2012

எனது படைப்புக்கள் ஒரே பார்வையில்...

எனது கவிதைகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

www.rimzapoems.blogspot.com

எனது நூல் வெளியீடுகளைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணவும்

www.rimzapublication.blogspot.com

எனது விமர்சனங்களைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

www.rimzavimarsanam.blogspot.com

என்னைப் பற்றிய அறிமுகம்

முத்துக்கமலம் வலைத்தளத்தில் என்னைப் பற்றிய அறிமுகம்

http://www.muthukamalam.com/muthukamalam_padaipalarkal%20rimza.htm

தமிழ் ஆதர்ஸ் வலைத்தளத்தில் என்னைப் பற்றிய அறிமுகம்

http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Rimza%20Muhamad.html

23.01.2011 தினகரன் கதம்பம் பகுதியில் என்னைப் பற்றிய தகவல்

http://www.thinakaran.lk/vaaramanjari/2011/01/23/?fn=f1101232

http://www.thinakaran.lk/vaaramanjari/2011/01/23/?fn=f1101232&p=1

எனது கவிதைகள்

ஊடறு வலைத்தளத்தில் எனது கவிதைகள்

http://udaru.blogdrive.com/archive/601.html

http://udaru.blogdrive.com/archive/597.html

http://www.oodaru.com/?p=3202#more-3202


பதிவுகள் வலைத்தளத்தில் எனது கவிதைகள்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=92:2011-04-01-03-07-46&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=46:2011-03-14-16-41-41&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=46:2011-03-14-16-41-41&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

முத்துக்கமலம் வலைத்தளத்தில் எனது கவிதைகள்

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai618.htm

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai611.htm

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai574.htm

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai573.htm

எனது நேர்காணல்

2009 நவம்பர் 22 இல் மித்திரன் வாரமலர் பத்திரிகையில் வெளியான எனது பேட்டி

http://rimzapublication.blogspot.com/2010/05/2009-22.html

2010 ஆகஸ்ட் முதலாவது வார இதழில் எங்கள் தேசம் பத்திரிகையில்வெளியான எனது பேட்டி

http://rimzapublication.blogspot.com/2010/08/2010.html

Senthooram Front Cover 13.03.2011

http://thinakaran.lk/vaaramanjari/2011/03/13/default.asp?fn=s11031315

2011.03.13 தினகரன் வாரமஞ்சரி 'செந்தூரம்' இதழில் இடம்பெற்ற எனது நேர்காணல். - எனது வலைத்தளத்தில்

http://rimzapublication.blogspot.com/2011/03/20110313.html

ஏடாகூடமான கேள்விகள்?

http://thinakaran.lk/Vaaramanjari/2012/02/12/?fn=f12021214


எனது தென்றலின் வேகம் கவிதைத் தொகுதி பற்றி

எனது தென்றலின் வேகம் கவிதைத் தொகுதியைப் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

http://www.docstoc.com/docs/78775086/Thenralin-Veakam

தென்றலின் வேகம் நூல் வெளியீட்டின் புகைப்படங்கள் சில பேஸ்புக் வாயிலாக

http://www.facebook.com/amujo?v=photos#!/album.php?aid=146731&id=555502667

http://www.facebook.com/note.php?saved&&suggest¬e_id=303229147965

என் நூல் வெளியீடு பற்றி டாக்டர் முருகானந்தன் சொன்னவை

http://suvaithacinema.blogspot.com/2010/02/blog-post_27.html

http://www.geotamil.com/pathivukal/NIZHALVUKAL_MKM_ON_RIMSA.htm

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

http://rimzapublication.blogspot.com/2011/05/blog-post.html

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய திரு. சூசை எட்வேர்ட்அவர்களின் கருத்து

http://rimzapublication.blogspot.com/2011/05/blog-post_21.html

எனது கவிதை நூல் வெளியீடு பற்றி பதிவுகள் வலைத்தளத்தில்...

http://www.geotamil.com/pathivukal/NIZHALVUKAL_MKM_ON_RIMSA.htm

எனது நூல் அறிமுக விழா நிகழ்வு பற்றி மன்னார் அமுதனின் வலைத்தளத்தில்....

http://amuthan.wordpress.com/2010/02/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/

ஊடறு வலைத்தளத்தில் எனது தென்றலின் வேகம் நூல் அறிமுகம்

http://www.oodaru.com/?p=877

தமிழ் ஆதர்ஸ் வலைத்தளத்தில் எனது தென்றலின் வேகம் கவிதைத் தொகுதியின் விமர்சனம் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா

http://www.tamilauthors.com/04/128.html

கீற்று வலைத்தளத்தில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுப்பு விமர்சனம் - எம்.எம்.மன்ஸூர்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14282:2011-04-25-10-31-42&catid=4:reviews&Itemid=267

'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - எம்.எம்.மன்ஸூர்

http://rimzapublication.blogspot.com/2011/05/04.html

http://thinakaran.lk/vaaramanjari/2011/04/24/?fn=g1104242&p=1

'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - க. பரணீதரன்

http://rimzapublication.blogspot.com/2010/09/blog-post_07.html

'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் – ஏறாவூர் தாஹிர்

http://rimzapublication.blogspot.com/2010/07/blog-post_13.html

'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - எச்.எப். ரிஸ்னா

http://rimzapublication.blogspot.com/2010/09/blog-post_02.html

பிற வலைத்தளங்களில் என்னுடைய விமர்சனங்களைப் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

'கண்ணீர் வரைந்த கோடுகள்' மீதான விமர்சனப் பார்வை

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13970:2011-04-04-14-14-36&catid=4:reviews&Itemid=267

http://www.tamilauthors.com/04/130.html

'ஒரு யுகத்தின் சோகம்' கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.tamilauthors.com/04/138.html

அக்குரோணி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14012:2011-04-07-03-27-08&catid=4:reviews&Itemid=267

http://www.tamilauthors.com/04/146.html

http://nilapenn.com/index.php/20110430228/book-review

http://networkedblogs.com/ibStm

http://mannaramuthan.blogspot.com/2011_05_15_archive.html

http://dantamil.blogspot.com/2011/04/maat-miab.html

'விழி தீண்டும் விரல்கள்' கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14432:2011-05-04-04-36-08&catid=4:reviews&Itemid=267

http://www.tamilauthors.com/04/140.html

'சுனாமியின் சுவடுகள்' கவிதைத் தொகுதி மீதான விமர்சனக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14476:2011-05-09-04-36-33&catid=4:reviews&Itemid=267

http://www.tamilauthors.com/04/142.html

இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15371:2011-06-30-09-05-35&catid=4:reviews&Itemid=267

http://www.tamilauthors.com/04/149.html

http://www.penniyam.com/2011/07/blog-post_14.html

http://www.valaicharam.com/news/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D

"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15291:q-q-&catid=4:reviews&Itemid=267

http://www.tamilauthors.com/04/148.html

http://www.vaarppu.com/review.php?rvw_id=88

http://rajamal.webs.com/apps/blog/categories/show/984818-1-2965-3007-2993-3009-2965-3021-2965-2994-3021-2965-2995-3021-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3006-2965-3007-2985-3021-2993-2985-

நீலாவணன் காவியங்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.geotamil.com/pathivukalnew/index.php?
option=com_content&view=article&id=352:2011-08-18-22-28-31&catid=14:2011-03-03-17-27-43

http://www.tamilauthors.com/04/155.html

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=407:2011-09-28-22-24-44&catid=1:2011-02-25-12-35-48&Itemid=42

கரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17534:2011-11-24-03-26-26&catid=4:reviews&Itemid=267

மகுட வைரங்கள் கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=549:2011-12-29-03-54-12&catid=14:2011-03-03-17-27-43

நூல் அறிமுகம்: நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=574:2012-01-09-01-53-00&catid=14:2011-03-03-17-27-43

கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=641:2012-02-16-04-22-12&catid=14:2011-03-03-17-27-43

http://metromirror.lk/index.php/2011-09-04-12-23-20/1269-2012-02-24-15-47-08.html

அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18729:2012-02-27-05-46-45&catid=4:reviews&Itemid=267

‘உன்னை நினைப்பதற்கு’ கவிதைத் தொகுதியில் என்னுடைய கவிதையும் இடம்பெற்றிருக்கின்றது. அதைப் பார்வையிடுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்

http://www.tamilauthors.com/04/150.html

எமது பூங்காவனம் சஞ்சிகை

எமது பூங்காவனம் சஞ்சிகைகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

www.bestqueen12.blogspot.com

எமது பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா பற்றி நேத்ரா அலைவரிசை செய்தியின் போது

http://www.youtube.com/watch?v=PI9RgYc026Q&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=PI9RgYc026Q

பூங்காவனம் இதழ்களைப் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

http://www.docstoc.com/docs/78577357/Poongavanam-01

http://www.docstoc.com/docs/78580036/Poongavanam-02

http://www.docstoc.com/docs/78581499/Poongavanam-03

http://www.docstoc.com/docs/80820045/Poongavanam-04

http://www.docstoc.com/docs/96336742/poo5

http://www.docstoc.com/docs/101353213/Poongavanam-06

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

விக்கிப்பீடியாவில் என்னைப்பற்றி

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D#.E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF_.E0.AE.87.E0.AE.A3.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D

Poem in other Web sites:-

http://kattankudi.info/2010/09/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B5/

http://orukavithai.com/index.php/kavithaiblog?start=186

http://www.tamilmurasuaustralia.com/2011/03/blog-post_991.html

http://www.tamil.net/aggregator/sources/54?page=11

http://www.mudukulathur.com/?p=1106

http://www.inbaminge.com/ts/kavithaigal/Viyarvaiyin%20Vilai/

http://www.inbaminge.com/ts/kavithaigal/Alli%20Veesaathe%20Avathippadaathe/

http://www.inbaminge.com/ts/kavithaigal/Saathal%20Nandre/

http://kalasem-kathambam.blogspot.com/2011/07/blog-post.html




http://www.thamilnattu.com/2011/10/blog-post_13.html

http://kalaiyoli.blogspot.com/2010/02/blog-post_02.html

Friday, February 24, 2012

தினகரன் வாரமஞ்சரியில் 2012 பெப்ரவரி 12 ஆம் திகதி வெளிவந்த எனது ஏடாகூடமான கேள்விகள்

தினகரன் வாரமஞ்சரியில் 2012 பெப்ரவரி 12 ஆம் திகதி வெளிவந்த எனது ஏடாகூடமான கேள்விகள்

http://thinakaran.lk/Vaaramanjari/2012/02/12/?fn=f12021214


ஏடாகூடமான கேள்விகள்?
ஏடாகூடம் : மொழி


பதில் தருவது: எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கே. ஒரு சிலர் காப்பி அடித்து எழுதி எழுத்தாளர்களாகி உள்ளார்கள். இன்னும் சிலர் காப்பி குடித்த படியே எழுதி எழுத்தாளர்கள் என்ற பெயர் வாங்கி உள்ளார்கள். இன்னும் சிலர் அங்கும் இங்கும் உள்ளதை 'பொறுக்கி' எடுத்து எழுதி எழுத்தாளர்கள் என்ற 'முத்திரையைக்' குத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நீங்கள் எந்த ரகம்?

ப. காப்பி குடித்துக்கொண்டே எழுதலாம் போலிருக்கிறதே. இதைவிட மற்ற இரண்டும் நமக்கு ஒத்துவராதுங்கோ....

நைசா நழுவிட்டிங்கோ)


கே. தமிழ் அரிச்சுவடியிலுள்ள எழுத்துக்களில் வாசமுள்ள எழுத்து எது?

ப. 'பூ!' இது கூட தெரியாதா பூ....

தப்பூ என்று சொல்ல முடியாம (வெச்சிட்டீங்களே ஆப்பூ)


கே. படமெடுத்தாடும் பாம்பை நம்பினாலும் பகட்டாகச் சிரிக்கும் பாவையரை நம்பக் கூடாது என்று சொல்கிறார்களே. இது ஏன்?

ப. அனுபவப்பட்டவங்க சொல்றாங்க. நாமும் கேட்டுக்க வேண்டியதுதான்.

(அப்போ அது உண்மைதான்னு சொல்லுங்கோவன்!)


கே. காதலுக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்கிறாரே உங்கள் நெருங்கிய தோழி. அது ஏன்?

ப. எதுக்குப்பா இந்த ஏடாகூடமான கேள்வி? எவ அவ என் தோழி? என்ன விட்ருங்கப்பா. தப்பிச்சுப் போறேன்.

(ஓ... அப்போ 'அவளா' நீங்க?)


கே. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்று ஒரு பழமொழி சொல்கிறார்களே. இதற்கு என்ன பொருள் என்று நீங்களாவது சொல்லுங்கள்?

ப. எதுவும் அப்படித்தான். நெருங்கிப் பழகினால் அருமை இருக்காது.

(என்னாங்க இது.... பாலுடன் எப்படீங்க 'பழக' முடியும்)


கே. எந்த எழுத்தாளரைப் பார்த்து பொறாமைப் படுகிaர்கள்?

ப. பொறாமையா? அதுவும் எனக்கா? நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்படுவதில்லை. என் அகராதியில் பொறாமை என்கிற வசனமே இல்லீங்க.

(அப்படியா! அந்த அகராதியை எனக்கும் கொஞ்சம் தாங்கோவன் பார்ப்போம்!)


கே. உங்களுக்கு வாய்மை பிடிக்குமா? பேனா மை பிடிக்குமா?

ப. எனக்கு இரண்டும் பிடிக்கும். அதாவது பேனா மை கொண்டு எழுதுகின்ற வாய்மை பிடிக்கும்.

(அந்தா மாட்டிக்கிட்டிங்கோ! பேனா மை கொண்டு வாய் மை போட முடியாதுங்கோ)


கே. உருவமில்லாத 'டை' எது?

ப. இந்த லொள்ளு தானே வேணாங்குறது? அட லொள்ளுன்னா அரட்'டை' தான்.

(அடடா நீங்கள் நன்றாக குறட்டை விட்டுத் தூங்குவீர்கள் போல் தெரிகிறதே....)


கே. காக்கைக் கூட்டில் குயில் ஏன் முட்டையிடுகிறது?

ப. அடுத்தவன் சொத்துக்குத்தானே அநேகமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். குயிலென்ன விதிவிலக்கா? என்ன தான் பண்ண அதற்கு காக்கா கூட்டிலதான் முட்டையிட முடிகிறது.

(இல்லீங்கோ - இது வேறு விஷயமுங்கோ!)


கே. இரண்டு வரிகளில் ஏடாகூடமான கவிதை ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்?

ப. சில மனைவிகள்!
அடிமைத் தனத்திலிருந்து
தன்னை
விடுவித்துக்கொள்ளமுடியாத
அப்பாவிக் கைதிகள்!

(இது ஏடா கூடமான கவிதை அல்ல ஏமாற்றப்பட்டவர்களின் புலம்பல்)

Sunday, July 3, 2011

22.09.2009 மித்திரன் வாரமலரில் என்னுடைய பேட்டி




நேர்கண்டவர் - க. கோகிலவாணி

1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்?

என் ஆரம்ப காலம் தொட்டே 'வெலிகம ரிம்ஸா முஹம்மத்' என்ற பெயரில் எழுதி வரும் நான் தற்போது தலை நகரத்தில் தங்கியிருந்து என் இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள நான் சுமார் 04 வருட காலங்களாக தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் இதுவரை 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை...

1. வங்கி கணக்கிணக்கக் கூற்று
2. கணக்கீட்டுச் சுருக்கம்.
3. கணக்கீட்டின் தெளிவு

அத்துடன் 'தென்றலின் வேகம்' என்ற கவிதை நூலொன்றை மிக விரைவில் இலக்கிய உலகுக்கு தர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. எழுத்துலக பிரவேசம் குறித்து...?

1997 - 98 காலப்பகுதியில் Sooriyan F.M, Shakthi F.M ஆகிய வானலைகளில் என்னுடைய கவிதைகள் தவழ்ந்தன. 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 'மாதர் மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்தது மாத்திரமன்றி குரல் கொடுத்தும் வந்துள்ளேன்.

மேலும் 2004ம் ஆண்டுக்கு பிறகே பத்திரிகை சார் துறையில் என் ஆர்வம் விழுந்தது. முதன்முதலில் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்' என்ற கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து என் ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. இன்று வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினமுரசு, தினக்குரல், சுடர் ஒளி, நவமணி, மித்திரன், விடிவெள்ளி மற்றும் சஞ்சிகைகளான செங்கதிர், ஞானம், நிஷ்டை, ஜீவநதி, படிகள் என்பவற்றுடன் இஸ்லாமிய சஞ்சிகைகளான அல்ஹஸனாத், அஸ்ஸகீனஹ், அல்லஜ்னா என்பவற்றிலும் கவிதைகள் களம் கண்டுள்ளன. அதே போல் www.rimzapoems.tk, www.rimzapublication.tk , www.rimzavimarsanam.tk என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்.

3. உங்களுடைய எழுத்தில் அதிகமாக மதம் சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏன்? மதம் என்ற பதத்தில் நின்று கொண்டா உங்கள் படைப்புக்களைப் படைக்க விரும்புகின்றீர்கள்?

அப்படியென்றில்லை. என்ன தான் கவிதைகளை எழுதினாலும் நான் இஸ்லாமியப் பெண் என்ற வட்டத்துக்குள் நின்று தான் எழுத முடியும் அல்லவா? ஆனாலும் கூட என் கவிதைகள் முற்று முழுதாக இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லாமல் பொதுவான மனித நியதிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தவிர மதம் குறித்து தனியான சொல்லாடல்களை முடிந்த வரை தவிர்த்தே வருகிறேன். (உதாரணமாக இஸ்லாமிய வசனங்களைக் கூறாமல் அதற்குரிய தமிழ் வசனங்களை கையாள்வது கூட). ஆன்மீகம் சார்ந்த பல கவிதைகள் எழுதினாலும் காதல், பெண்ணியம், சமூக அவலம் சார்ந்தனவற்றையும் எழுதியிருக்கிறேனே. அவை பல பத்திரிகைகளிலும் கூட பிரசுரமாகியிருக்கின்றன.

4. நீங்கள் எழுதுவதற்கு ஊக்கம் தந்தவர்கள் குறித்து?

இந்த கேள்விக்கு விடையளிப்பது சற்று சிரமம் தான். ஏன் எனில், என் வளர்ச்சிக்கு பலரும் பற்பல விதங்களிலும் எனக்கு உதவியிருக்கிறார்கள். அந்த வகையில் கவிஞர் ஏ. இக்பால், நீர்வை பொன்னையன், சிவசுப்ரமணியம், புரவரலர் ஹாஷிம் உமர், கலைச்செல்வன், ரஷPத் எம். ரியாழ், திக்வல்லை ஸப்வான், ஸ்ரீதர் பிச்சையப்பா, தீபச்செல்வன், ரேணுகா பிரபாகரன், அனலக்தர், மூதூர் முகைதீன், கலைவாதி கலீல், ஜரீனா முஸ்தபா, கா.பொன்மலர், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, பீ.எம். புண்ணியாமீன், மொரட்டுவ வஸீர், கிளியனூர் இஸ்மத் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் பெயர் குறிப்பிடப்படாதோர் இன்னும் பலர் இருக்கலாம். அவர்கள் மித்திரனின் இடத்தை கருத்தில் கொண்டு மன்னிக்கவும். இவர்களில் பலர் புத்தகங்களுடன் நல்ல ஆலோசனைகளும் தந்தவர்கள். மற்றவர்கள் என் படைப்புகள் செவ்வனே வெளிவரக் காரணமாக இருந்தோர்கள்.


5. உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து?

விமர்சனங்கள் படைப்பாளியை முழுமைப்படுத்துபவை. அதனடிப்படையில் சொல்வதென்றால் என் கவிதைகளில் சமூகம் சார்ந்தவற்றையே பெரிதும் எதிர்பார்ப்பதை வாசகர்களின் கடிதங்கள் மூலமும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் அறியக்கிடைக்கிறது. ஆரம்ப கேள்விக்கான விடையில் குறிப்பிட்டது போல் மதத்தை மட்டும் அடிப்படையாக்கி என் கவிதைகளை படைக்கவில்லை. உதாரணமாக நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பானதும், மித்திரன் கலாவானம் பகுதியில் பிரசுரமானதுமான 'நாளும் நடப்போம் நல்வழியில்' என்ற கவிதை பல வாசக நெஞ்சங்களை கவர்ந்துள்ளதாக கூறினார்கள்....

அத்துடன் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மையாகவே இன்னும் பல விமர்சனங்ளை தனிப்பட்ட ரீதியாக என்னிடம் கூறினால் அது என் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

6. வாசித்ததில் பிடித்தவையும், ஏன் பிடித்தது என்பது குறித்தும்....?

பிரபல எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே மக்களோடு ஒன்றித்து தன் கருத்தைக் கூறும் வல்லமையை கையாண்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையை அச்சு அசலாக ஒப்புவிப்பதில் அவர் கையாளும் பாணி தனி ரகமானது. அவருடைய சிறுகதைகளில் வாசகர்கள் கட்டுண்டுப்போவதில் ஆச்சரியமில்லை. அதற்காக மற்ற கவிதைகளோ, சிறுகதைகளோ தரமுள்ளவையா, அற்றவையா என்று கூறுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.

7. எழுத்து சார்ந்த எதிர் கால திட்டங்கள் என்ன?

BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பை உருவாக்குவதிலும் அதன் பல்வேறு செயற்திட்டங்களின் கீழ் கவிதைச் சிற்றிதழ், இஸ்லாமிய சஞ்சிகைகளை வெளியிட தீர்மானித்திருப்பதுடன். ஆதற்கான ஆலோசனைகளையும் நடாத்தி வருகிறோம். ஏதிர்காலங்களில் எமது அமைப்பினூடாக இன்னும் பல புத்தகங்களையும் வெளியிட உத்தேசித்துள்ளோம். எமது அமைப்பில் நானும் சகோதரி தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, மொரட்டுவ வஸீர என்போர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றோம்.

இன்று இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் வேறு தொழில்களை எடுத்துக் கொண்டாலும் ஆண்களின் பங்களிப்பே அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. திருமணத்துக்கு முன்னரும், பின்னரும் இலக்கிய உலகிலிருந்து பெண்கள் தாமாகவே விலகிக் கொள்கிறார்கள். அல்லது அவ்வாறு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எனவே தான் பெண்கள் சார்ந்து எமது விளிப்புணர்வு எழுந்துள்ளது.

விசேடமாக, இலக்கிய ஆர்வம் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் நான்கு சுவர்களுக்குள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நங்கையரை இலக்கிய உலகில் பிரகாசிக்கச் செய்வதில் ஏணியாக இருக்கவும் எமது அமைப்பின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுகிறோம்.

இத்திட்டம் மூலம் எமது எழுத்துலக முயற்சி மேலும் சிறப்புற இறைவனை வேண்டுவதோடு ஆர்வலர்களிடமிருந்து ஆக்கங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை மித்திரனூடு சொல்லிக் கொள்கிறோம். அது மட்டுமன்றி தனவந்தர்களின் உதவியையும் எம் அமைப்பு எதிர்பார்க்கிறது.

தொடர்புகளுக்கு - Rimza Mohamed
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.
Mobile- 0094 77 5009 222
E-mail- poetrimza@yahoo.com

Saturday, May 21, 2011

திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய
திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து


இப்போது ஏராளமாக கவிதைகள், கவிதை நூல்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன. என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வதே என் சிற்றறிவுக்கு சிரமமாக இருக்கின்றது. மறைபொருளாக, விளங்கிக்கொள்வது சிரமமானதாக எழுதுவதுதான் மேதாவிகளின் அதி மேதாவித்தனம் என்ற மனப்பான்மையோ என்னவோ! ஆனால் தென்றலின் வேகம் கவிதைத் தொகுதியைப் படித்தவுடனேயே பளிச்சென்று புரிந்து விடுகின்றது. தேனாய் இனித்து நெஞ்சில் நிறைந்து விடுகின்றது. கவிஞர் இத்தொகுதியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். எங்களை மனங்களிக்கச் செய்திருக்கிறார். கவிஞனின் நெஞ்சம் எப்படியிருக்க வேண்டுமோ, கவிஞரின் உள்ளமும் அப்படியே இருக்கிறது. காலங்காலமாக அடக்கி, அமுக்கி வைத்திருக்கும் பெண்களிலிருந்து இப்படியொரு கவிதாயினி தோன்றியிருப்பது ஆச்சரியமே.

இலக்கிய பூங்காவனத்தில் இன்னும் பல மனம் வீசும் அழகுப் பூக்களை தமிழ் உலகு எதிர்பார்க்கிறது. அற்புதம். அருமை. வாழ்த்துக்கள்.

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

கவிஞன் ஒரு படைப்பாளி. படைப்பாளியின் இதயத்திலிருந்து பிறப்பது கவிதை. கவிதை அவனது முகம். வெலிகம ரிம்ஸாவின் இந்த நூல் எமது கவிதை உலகுக்கு ஒரு புதுமுகம். ஆனால் அவரது கவிதைகள் பல எமக்கு பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானது.

கவிஞனின் அகத்தில் எழும் உணர்வுகள் கவிதை வடிவம் பெறுகின்றன. ஆழ்மனத்தின் ஓலங்கள், இன்பகரமான எண்ணங்கள் இவற்றுக்கு கவிதை ஒரு வடிகாலாகின்றது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான மொழிக்கு அங்கே ஒரு முக்கியமான இடமுண்டு.

இந்த நூலின் தலையாய சிறப்பாக நான் குறிப்பிட விரும்புவது இதன் மொழிநடை. எளிமையான கவிதை மொழி. இரண்டு மூன்று தடவைகள் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியதில்லை. வாசகர்களை மருட்டுகிற சிக்கலான மொழிநடை இங்கு இல்லை. பழகு தமிழில் இலகு கவிதை. தனது தேவைக்கேற்ப உருவத்தை அமைத்துக்கொண்டுள்ளார். ஒருவரை விழித்து பல கவிதைகளில் அவருடன் உரையாடுகிறார். புதிய தேவைகள் எப்போதும் புதிய வடிவங்களைப் பிரசவிப்பதில் ஆச்சரியமில்லை. கவிதை சொல்லும் முறைமை சிறப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக

உடைந்த கண்ணாடியாய் மாறி
உள்ளத்தை கீறிச் செல்கின்றன
தெரியாமல் நீ
வீசிச்செல்லும் பார்வைகள்

ரிம்ஸாவின் பாணியிலும் ஒரு தனித்தன்மையுண்டு. கவிதைகளில் எதுகை மோனைகள் வந்து விழுந்திருக்கின்றன. அவ்வாறே சந்த ஒழுங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

பாலைச் சிரிப்பால்
பணயக் கைதியாய் - என்னை
பிணைத்துக்கெண்டவளே
அன்பால்
அணைத்துக்கொண்டவளே

படிமம், குறியீடு என்கிற புதுக்கவிதை உத்திகளைவிட இவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அதனால் கவிதைகளின் ஒலி நயம் சிறந்திருக்கின்றது. ஆனால் அதுவே சொற்களின் கனதியைக் குறைப்பதற்கும், கட்டுக்கோப்பைக் குலைப்பதற்கும் சில இடங்களில் காரணமாகி விடுகின்றன. துக்கம் கனத்துத் துயில்கிறதா... என்ற வரியை இங்கே சுட்டிக்காட்டலாம். அதே சமயம் சில கவிதை வரிகள் அருமையாக அமைந்துவிட்டிருக்கின்றன.

காதல் சொல்லும் சுதந்திரத்தை
விட்டுவைத்தேன்...
உனை என் மனசில் நிரப்பி
இறுக தைத்தேன்!

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இணைந்த ஒரு புதுப்பாணி. மரபுக்குள் இருந்து கவிதை எழுதும் புதுக் கவிதையாளர் வழியில் ரிம்ஸாவும் முகிழ்ந்து நிற்கும் ஒரு புதிய கவிஞர்.

ரிம்ஸா பல கருப்பொருள்களைக் கையாண்டுள்ளார். தாய்ப்பாசம், நம்பிக்கை, காதல் ஏக்கம் இப்படிப் பல... ஆனாலும் காதல் பெருமளவு இடத்தைப் பிடித்துவிட்டது. காதல் உணர்வின் பல்வேறு நிலைகள், காதலில் வீழ்தல், தவித்தல், பிரிந்து தவித்தல், புறக்கணிப்புக்கு ஆளாதல், ஏமாற்றம் என்று அவை பல. உதாரணமாக மௌனத்துயரம் என்ற கவிதையைக் குறிப்பிடலாம். கவிஞரிடம் கற்பனை இருக்கிறது. உணர்ச்சி வேகம் இருக்கிறது. கவிபுனையும் ஆற்றலும் இருக்கின்றது. அதனால்தான் காதலின் நுண்ணிய வேறுபாடுகளோடு வௌ;வேறு படிநிலைகளை அவரால் காட்ட முடிகி;றது. எனினும் சமூக நோக்குடனான கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளன. இது கவனிக்கப்பட வேண்டியதொன்று. தனிமனித உணர்வு நிலைக்கு ஈடாக சமூகம் பற்றிய அக்கறையும் புலப்படவில்லை. அக உணர்வுகளுடன் சமூகம் மோதும்போது சில கவிதைகள் பீறிட்டுக் கிளம்பியுள்ளன. அதே போல தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை அவலங்கள் சமூகத்தின் சிந்தனை பற்றி இன்னும்

சில கவிதைகள் தந்திருக்கலாம். அது கவிஞரை இன்னுமொரு மேலான தளத்திலே ஏற்றி வைக்கும். விடியலைத் தேடும் வினாக்குறிகள் போன்ற கவிதைகள் தேவை.

ஒரு பெண் தனித்து இயங்கும் போது அச் சமூகத்தால் விடுப்பு பார்க்கப்படுகிறாள். அந்தப் பார்வை வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மௌனித்துப்போன மனம் என்ற கவிதை இதை உரக்கவே பேசுகிறது. முடிவில் மௌனித்துவிடும் பெண்ணைக் கோடிட்டுக் காட்டுகிறார். பெண்ணின் இருப்பு மறுதலிக்கப்டுகையில் அவள் நிழலாக இயங்குகின்றாள். துவண்டுவிட்ட அவள் மனதை, உள்ளக் குமுறலை ஒரு கவிதையில் வடிக்கிறார். கொள்ளைப்போன தனது கனவுகளை உரக்கக் கூறி அவள் தனது இருப்பை நிலைநாட்டுகிறாள். உதாரணமாக ரணமாகிப்போன காதல் கணங்கள் என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.

இப்படிப் புலம்புகின்ற பெண் புயலாக எழுகிறாள். புயலாடும் பெண்மை - இங்கே தான் இந்த நூலின் தலைப்புடன் ஏதோ ஒரு பொருத்தப்பாட்டை நான் காண்கிறேன். தென்றலின் வேகம் கூடினால், அது புயலாகவும் உருவெடுக்கக்கூடும். மொத்தத்தில் தனது மன ஆழத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை, உறவுச்சிக்கல்களாலும், உணர்வுச் சிக்கல்களாலும் அலைக்கழிக்கப்படும் பெண்ணை எமக்குக் காட்டுகிறார் கவிஞர். புறக்கணிக்கப்படும் பெண்ணின் அழுகையாக, வலியாக, வேதனையாக, ஏமாற்றமாக, கனவாக... இப்படி பல பதிவுகள் இந்நூலில் உள்ளன. கவிஞருக்கு இந்த எழுத்து ஒரு வடிகாலாகும். அதே சமயம் பெண் எழுத்திற்கு இது ஒரு வெற்றியாகவும் அமைந்து விடுகின்றது.

வாழ்வில் நம்பிக்கை வேண்டும் என்று அடித்துக்கூறுகிற சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. வெற்றியின் இலக்கு, வானும் உனக்கு வசமாகும் முதலிய கவிதைகள் மனிதனின் ஆற்றலை உணர்த்தி நம்பிக்கையை விதைத்துச் செல்கின்றன.

ரிம்ஸாவின் கவிதைகள் இலகுவான நடையில் நீரோட்டம்போல தவழ்ந்து, தென்றலைப்போல எம்மைத்தடவி சுகம் சேர்க்கின்றன. ஆத்மார்த்தமான அனுபவங்கள் முகங்காட்டுகின்றன. சொற்கள் கவிஞரின் கைவண்ணத்தில் கைகட்டி நிற்கின்றன. ஆனால் தலைப்புக்களில் சிலவற்றை கவிதையின் கருத்துக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கலாம்.

பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணே பேசுவதில் உள்ள சிறப்பை பல கவிதைகளில் காண்கிறோம். இன்னும் அவரது பார்வையை விசாலமாக்கியிருக்கலாம். குடும்ப அமைப்பிலே பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் கவிதைகளில் பரிணமித்திருக்கலாம். இனிவரும் கவிதைகளில் சமூகத்தின் பல பரிமாணங்களையும் உற்று நோக்கல் சிறப்பு தரும். ஒரே அச்சாணியில் பல கவிதைகள் சுழல்வதையும் தவிர்க்கலாம்.

கவிதை என்பது மனிதர்களின் மனங்களும், முகங்களும் சம்மந்தப்பட்டது. கவிஞரின் முகம் அங்கே தெரிகிறது. சமூகத்தின் முகமும் அங்கே தெரிகிறது. அதனால்தானோ எனனவோ ஓவியர் ஸ்ரீதர், முகங்களிலே தனது கவனத்தை செலுத்தியள்ளார். இதுபோல இன்னும் சிறப்புகளுடன் கூடிய பல கவிதைகளை கவிஞரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்!!!

Monday, May 2, 2011

04. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - எம்.எம். மன்ஸூர்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுப்பு - ஒரு கண்ணோட்டம்

தந்திச் செய்திகள் போல் தற்காலத்தில் எழுந்துள்ள கவிதை இலக்கியமானது சொற்சுருக்கமாக வாழ்க்கையின் பெரும் பகுதிகளை விமர்சித்துச் செல்கிறது. செய்யுளாக, பாக்கலாக, கவிதைகளாக உருமாறி, மரபு தாண்டிய புதுவடிவக் கவிதைகளையே நாம் இன்று படிக்கிறோம்.

தினம் தினம் பல கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்த வண்ணமிருப்பது அதன் வளர்ச்சிப் போக்கைக் காட்டி நிற்கிறது. இந்த வரிசையில் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இத்தொகுதியை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் 64 கவிதைகள் பல தலைப்புக்களில் இடம்பெற்றிருப்பதோடு நூலின் பின் இணைப்பு போல கவித்துளி என்ற தலைப்பிட்டு வரிக்கவிதைகள் 29 காணப்படுகின்றன.

கவிஞர் ஏ. இக்பால் தனது முன்னுரையில் இந்நூலில் அடங்கியுள்ள கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது 'அனுபவமும் அனுமானமும் நிறைந்தததாக இக்கவிதைகள் தென்படுகின்றன. மனிதத்துவ இயல்புகளை படம்பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. சாமான்யமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அறிவூட்டி நிற்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினர் தமது பதிப்புரையில் 'ரிம்ஸா தான் பிறந்த மண்ணிலேயே நின்றுகொண்டு தனது அவதானிப்புக்களையும், அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக கவிதாலங்காரத்துடன் கவிதைகளாகப் புனைந்துள்ளார். இம்முயற்சிக்கு தற்துணிவு வேண்டும். இது இவரிடம் உள்ளது. இவரது கவிதைகளில் பெரும்பாலானவை தன்னுணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. ரிம்ஸா தனது பார்வையை மக்கள் பக்கம் விசாலித்தால் மக்கள் படைப்பாளியாகக் கொள்ளப்படுவார்' என்ற உண்மையையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இளம் கவிக்குயிலான ரிம்ஸா முஹம்மத் என்னுரை என்று உரைக்காவிட்டாலுங் கூட எண்ணங்கள் வண்ணமாகும் நேரத்தில்... என்று குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நோக்குகையில் அவரது கவியாற்றலையும், இலக்கியத் தாகத்தையும் உணரக் கூடியதாகவும் சறுக்குமர ஏற்றத்திலே விடாமுயற்சி கொண்டு உச்சியைத் தொடுவதற்கு எத்தனித்து நிற்கும் ஒரு சிறந்த கவிஞராக விளங்குகிறார் என்பதை அறிய முடிகிறது.

தாய்மை, அன்பு, காதல், மானிட தர்மம், மானிடநேயம், துணிவு, துன்பம், ஏமாற்றம் என்றெல்லாம் அவரது கவிதைகளின் பாடுபொருள்களாக கவிதா விலாசமிடுகின்றன. தாயை இழந்த துயரத்தில் ஆராதனை என்ற கவிதையில்

'துடுப்பிழந்த படகாய்
துயரக்கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கீடாக
தரணியிலே ஏதுண்டு?'

என்று தாயன்பின் பெருமைகளைப் பற்றிச்சொன்னவர்,

'உன் பிரிவுத்துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு...
ஒத்தடம் தர உனையன்றி
யார் வருவார் துணைக்கு?'

என துணையின்றி, ஆறுதலுக்கு யாருமற்ற கைவிடப்பட்ட ஒரு வெறுமை நிலையில் புலம்புகின்ற விதம் கரையாத கல்மனதையும் கரைத்துவிடும் தன்மை பெற்றுள்ளதை உணர முடிகின்றது.

வெற்றியின் இலக்கு என்ற கவிதை உழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லுகிறது.

'உழைப்பே வெற்றியைத்
தேடித்தரும்..
வாழ்வில் முன்னேற்றம் உன்னை
நாடி வரும்'

என்று உழைப்பால் உயரலாம் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

'விடியலைத்தேடும் வினாக்குறிகள்' என்ற கவிதை மூலமாக கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலால் மக்கள் பட்ட அவலங்களையும், கஷ்டங்களையும், அவர்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் முடங்கிக் கிடப்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'கோர இடிமுழக்கோடு அன்று
குண்டுமாரி பொழிந்த தீவில்
குருதிப்புனல் பெருக்கெடுத்ததால்
குடிபெயர்ந்து
குஞ்சி பூராண்களோடும்
கிழடுபட்டைகளோடும்
கணக்கற்றோர்
கண்ணீரும் கம்பலையுமாக
காப்பகங்களில் நெளிகிறார்கள்'

நிலவுரங்கும் நள்ளிரவு, நித்திரையில் சித்திரவதை, நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள், ஜீவநதி, ஏற்றுக்கொள் இன்றேல் ஏற்றிக்கொல் போன்ற பல கவிதைகளில் சந்தமும், ஓசை நயமும் அழகாக காணப்படுகின்றது. அந்தக் கவிதைகள் இனிய வசனங்களால் புனையப்பட்டிருப்பதானது கன்னியரினதும் காளையரினதும் இதயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.

குபேர வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்கள், குடிசைவாழ் மக்களை சற்றும் எட்டிப் பார்ப்பதில்லை என்பதனை

'குபேரபுரியில் கொலுவிருக்கும்
கோபுரவாசிகளே..
கொஞ்சம் குனிந்து கீழாக
குக்கிராமவாசிகளையும் பாருங்கள்'

என்று கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றையும் முன்வைத்திருக்கிறார் கவிஞர்.

பாவங்களின் பாதணி, வெற்றிக்கு வழி, வானும் உனக்கு வசமாகும், அழகான அடையாளம், வாழ்வு மிளிரட்டும் போன்ற கவிதைகள் நல்ல கருத்துக்களை சொல்லிப்போகின்றன.

பொதுவாக சிறந்ததொரு கவிதைத் தொகுப்பை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். எம்மை விட்டுப் பிரிந்த பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பா கருத்தாழமிக்க கவர்ச்சியான ஓவியங்களை, ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றவகையில் வரைந்து கவிதைகளுக்கு மெருகூட்டியிருக்கிறார்.

வளர்ந்துவரும் கவிதாயினிக்கு நிச்சயம் எதிர்காலம் பட்டுக்கம்பளம் விரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அவரது இலக்கிய ஆர்வத்தையும், அவரது கவிதைகளின் தன்மைகளையும் பார்க்கும்போது புகழ்பெற்ற கவிஞர்கள் வரிசையில் புகழ்பூத்த பெண்கவிஞராக இவர் திகழ்வார் என்பது சர்வநிச்சயம்.

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=

இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14282:2011-04-25-10-31-42&catid=4:reviews&Itemid=267

எனது தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றி 2011.04.24ம் திகதி தினகரன் பெண் பகுதியில் எம்.எம். மன்ஸூர் அவர்கள் எழுதி வெளிவந்த விமர்சனத்தைப் பார்க்க

http://thinakaran.lk/vaaramanjari/2011/04/24/?fn=g1104242

என்னால் வெளியிடப்பட்ட நூல்கள்

01

01

02

02

03

03

04

04

CALCULATER